மாமனிதர் கிட்டினன் சிவநேசன் அவர்களது 15 ஆம் ஆண்டு நினைவேந்தல்
மாமனிதர் கிட்டினன் சிவநேசன் அவர்களது 15 ஆம் ஆண்டு நினைவேந்தல் மட்டக்களப்பில் வெகுசிறப்பாக இடம்பெற்றது.
ஈகச் சுடரினை நாவற்தோட்டத்தினை சேர்ந்த மாவீரர் கங்கா அவர்களது தாயார் திருமதி.தம்பிப்போடி அமராவதி அவர்கள் ஏற்றிவைத்தார்.
பாராளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன் மலர் மாலை அணிவித்தார்.
தேசிய அமைப்பாளர் தருமலிங்கம் சுரேஸ் கட்சியின் கோறளைப்பற்று பிரதேச சபை உறுப்பினர் குணராசா குணசேகரன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன் ஆகியோர் நினைவு உரையாற்றினார்கள்.