யாழ் தெல்லிப்பழை – கட்டுவன்புலம் பகுதியில் மின்சாரம் தாக்கி இளைஞன் ஒருவர் நேற்று (05) உயிரிழந்துள்ளார்
யாழ் தெல்லிப்பழை – கட்டுவன்புலம் பகுதியில் மின்சாரம் தாக்கி இளைஞன் ஒருவர் நேற்று (05) உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் நேற்று 5 ஆம் திகதி மாலை கட்டுவன்புலம் பகுதியில் இடம்பெற்றுள்ளதாக யாழ் செய்திகள் தெரிவிக்கின்றன.
உயிரிழந்தவர் யாழ்ப்பாணம் தெல்லிப்பழை பகுதி சேர்ந்த எஸ்.மாதுசன் (வயது-18) என தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழ் கட்டுவன் புலம் பகுதியில் வேப்ப மரத்தின் கொப்புகளை வெட்டும் பொழுது பிரதான அதி உயர் மின்கம்பியில் இருந்து மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.
மேலதிக விசாரணைகளை யாழ் தெல்லிப்பழை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.