பாராளுமன்றத்தை கூட்டுமாறு பிரதமருக்கு கடிதம்
![பாராளுமன்றத்தை கூட்டுமாறு பிரதமருக்கு கடிதம்](https://likedtamil.lk/wp-content/uploads/2023/02/FB_IMG_1676523679929.jpg)
பாராளுமன்றத்தை கூட்டுமாறு பிரதமருக்கு கடிதம்
பாராளுமன்றத்தை கூட்டுமாறு கோரி சுதந்திர மக்கள் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களின் கையொப்பங்களுடனான கடிதம் பிரதமர் தினேஷ் குணவர்த்தனவுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
அந்த கடிதத்தின் பிரதிகள் சபாநாயகர், எதிர்கட்சியை அங்கத்துவப்படுத்தும் சகல பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பாராளுமன்ற பொதுச் செயலாளருக்கு அனுப்பப்பபட்டுள்ளதாக சுதந்திர மக்கள் கூட்டமைப்பு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
உள்ளுராட்சிமன்ற தேர்தலுக்கான வாக்கு சீட்டு விநியோக பணிகள் காலவரையறையின்றி பிற்போடப்பட்டமை நாட்டின் ஜனநாயக்கத்திற்கு கடும் அச்சுறுத்தலை தோற்றுவித்துள்ளதாக அந்த கடித்ததில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
உரிய வாக்கு சீட்டுக்களை விநியோகிப்பதற்காக திறைசேரி நிதி வழங்காமை ஜனநாயகத்திற்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தலை தெளிவாக எடுத்துக்காட்டுவதாக சுதந்திர மக்கள் கூட்டமைப்பு அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.