கணவன் உயிரிழந்த செய்தியை அறிந்த மனைவி தனக்குத் தானே தீ மூட்டி உயிரை மாய்த்தார்
கணவன் உயிரிழந்த செய்தியை அறிந்த மனைவி தனக்குத் தானே தீ மூட்டி உயிரை மாய்த்த
துயரச் சம்பவம் ஒன்று யாழ்ப்பாணத்தில் இடம் பெற்றுள்ளது.
நேற்று முன்தினம் சனிக்கிழமை(11) இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, யாழ். போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த மூன்றாம் குறுக்கு தெரு யாழ்ப்பாணத்தை சேர்ந்த செல்வதயாளரூபன் என்பவர் நேற்று முன்தினம் சனிக்கிழமை(11) மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார். இந்த செய்தியை தொலைபேசி மூலமாக அறிந்து கொண்ட அவரின் மனைவி நாகராணி (வயது-61) தனக்கு தானே மண்ணெண்ணெய் ஊற்றி தீயை மூட்டியதாக தெரிவிக்கப்பட்டது. இதில் எரிகாயம் அடைந்த அவர் யாழ். போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்ட போதும் இரவு சிகிச்சை பலன்றி உயிரிழந்துள்ளார். இம் மரணம் தொடர்பில் நேற்று ஞாயிற்றுக்கிழமை(12) யாழ். போதனா வைத்தியசாலை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் விசாரணைகளை மேற்கொண்டார்.