வைத்தியசாலையில் இருந்து தப்பி ஓடிய வழக்கம் விளக்கமறியல் கைதி ஒருவர் சினிமாப் பாணியில் பொலிசாரால் மடக்கிப் பிடிக்கப்பட்ட சம்பவம்
![வைத்தியசாலையில் இருந்து தப்பி ஓடிய வழக்கம் விளக்கமறியல் கைதி ஒருவர் சினிமாப் பாணியில் பொலிசாரால் மடக்கிப் பிடிக்கப்பட்ட சம்பவம்](https://likedtamil.lk/wp-content/uploads/2023/01/dpt9q2q8_arrest-generic-istock-650_625x300_23_February_20.jpg)
வைத்தியசாலையில் இருந்து தப்பி ஓடிய வழக்கம் விளக்கமறியல் கைதி ஒருவர் சினிமாப் பாணியில் பொலிசாரால் மடக்கிப் பிடிக்கப்பட்ட சம்பவம் மந்திகையில் உள்ள பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு முன்பாக நேற்று வெள்ளிக்கிழமை(13) மாலை இடம் பெற்றுள்ளது.
நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் ஹெரோயின் வழக்கு மற்றும் பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில திருட்டு சம்பந்தமான வழக்குகளில் பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்ட வல்வெட்டிதுறை பகுதியை சேர்ந்த 18 வயதுடைய இளைஞர் ஒருவர் சீர்திருத்த பள்ளியிலிருந்தும் இரண்டு தடவைகள் தப்பி வந்தமை தொடர்பில் வழக்குகள் நிலுவையில் இருந்தன.
இச் சந்தேகநபர் நேற்று முன்தினம் வியாழக்கிழமை(12) பருத்தித்துறை பொலிசாரால் கைது செய்யப்பட்ட போது தற்கொலைக்கு முயற்சித்த நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
நேற்று வெள்ளிக்கிழமை(13) வைத்தியசாலைக்கு சென்ற பருத்தித்துறை பதில் நீதவான் அலெக்ஸ்ராஜா அவரை எதிர்வரும் 25ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கமாறு உத்தரவிட்டிருந்தார்.
இதனைத் தொடர்ந்து சற்று நேரத்தில் விழக்கமறியல் கைதி வைத்தியசாலையில் இருந்து தப்பி ஓடிய போது பொலிசார் அவரை துரத்திச்சென்று சினிமாப் பாணியில் மடக்கி பிடித்து வைத்திய சாலையில் ஒப்படைத்தனர்.
பின்னர் சிறைச்சாலை வாகனம் மூலம் அவர் யாழ். சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.