மனோகரன் கென்னடி விஜயரத்தினம் அவர்கள் மறைந்த 5 ஆண்டு நினைவேந்தல் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினரால் அனுஷ்டிக்கப்பட்டது.
கல்வி, இனம், மொழி, விடுதலை, ஊர், மனிதநேயம் ஆகியன சார்ந்து மக்கள் பணியாற்றிய தன்னலமற்ற சேவையாளரும் கல்வி உலகம் போற்றிய ஆற்றல் மிக்க ஆங்கிலத்துறைப் பேராசிரியரும் பன்முக ஆற்றலும், ஆளுமையும் கொண்டு விளங்கியவருமாகிய கலாநிதி ஜோன் மனோகரன் கென்னடி விஜயரத்தினம் அவர்கள் மறைந்த 5 ஆண்டு நினைவேந்தல் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினரால் அனுஷ்டிக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மகளிர் அணி தலைவியும் நல்லூர் பிரதேச சபை உறுப்பினர் ஆகிய வாசுகி சுதாகர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்