தமிழாராய்ச்சி மாநாட்டில் படுகொலை நினைவாலயத்தில் இன்றைய தினம் உணர்வுபூர்வமாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரால் அனுஷ்டிக்கப்பட்டது
![தமிழாராய்ச்சி மாநாட்டில் படுகொலை நினைவாலயத்தில் இன்றைய தினம் உணர்வுபூர்வமாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரால் அனுஷ்டிக்கப்பட்டது](https://likedtamil.lk/wp-content/uploads/2023/01/20230110_165647-850x560.jpg)
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் படுகொலை செய்யப்பட்டவர்களின் 49வது நினைவேந்தல் இன்றைய தினம் இடம்பெற்றது.
யாழ்ப்பாணம் முற்றவெளியில் அமைந்துள்ள உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் படுகொலை நினைவாலயத்தில் இன்றைய தினம் மாலை 4.30 மணியளவில் உணர்வுபூர்வமாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரால் அனுஷ்டிக்கப்பட்டது
.
1974ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 3ஆம் திகதி தொடக்கம் 10ஆம் திகதிவரை யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்ற நான்காவது உலக ஆராய்ச்சி மாநாட்டில் ஏற்பட்ட கலவரத்தில் ஒன்பது பேர் படுகொலை செய்யப்பட்டனர்.
உலகலாவிய ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த இந்த மாநாட்டை யாழ்ப்பாணத்தில் நடத்தவிடாமல் அப்போதைய சிறிமாவோ பண்டார நாயக்க தலைமையிலான அரசு, காவல்துறையினரை அனுப்பி கலவரத்தை ஏற்படுத்தியது. இதன்போது ஒன்பது தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர். தமிழர்கள் மனத்தில் நீங்காத வடுக்களாக இந்தப்படுகொலைச் சம்பவம் பதியப்பட்டது.