2009 இன அழிப்புக்கு பிறகு நமது சமூகத்தில் போதை எனும் அரக்கன் திட்டமிட்டு பரப்பப்பட்டது.
கைதடி உதயசூரியன் சனச சமூக நிலையத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் சாவகச்சேரி பிரதேச சபை உறுப்பினர் நிரஞ்சன் கலைவாணியால் ஏற்பாடு செய்யப்பட்ட வட்டார கூட்டத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் மகளிர் அணி தலைவியும் நல்லூர் பிரதேச சபை உறுப்பினரும் ஆசிரியரும் ஆகிய வாசுகி சுதாகர் கருத்து தெரிவிக்கையில்
2009 தமிழ் இன அழிப்புக்கு பிறகு திட்டமிட்டு எமது சமூகத்தை சீர்குலைக்க கொண்டு பெறப்பட்டது தான் இந்த போதை வஸ்து.
எங்களுடைய பிள்ளைகள் இந்த போதை வஸ்துக்கு அடிமையாகி விட்டார்கள் கிட்டத்தட்ட 11 வயது தொடக்கம் 47 வயதான ஏராளமான சிறுவர்கள் உட்பட பெரியவர்கள் வரை இப்போதை வஸ்துக்கு அடிமையாகி உள்ளார்கள் .
அவர்களை அடக்க முடியாத ஒரு இறுக்கமான சூழல் இந்த சமூகத்துக்குள் வந்திருக்கின்றது.
இளைஞர்கள் இது தொடர்பான விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும் நீங்கள் இது சம்பந்தமாக வழியில் சென்று கதைக்க வேண்டும்.
இந்த போதை வஸ்து என்பது எமது இனத்தை அழிப்பதற்காக திட்டமிட்டு பரப்பப்பட்ட ஒன்று இந்த போதை வஸ்துக்கு ஏராளமான பாடசாலை சிறுவர்களே பாதிக்கப்பட்ட உள்ளனர்.
என அவர் மேலும் தெரிவித்துள்ளார்