வடமராட்சி கிழக்கு வத்திராயன் பகுதியில் சிசு ஒன்றின் சடலத்தை நாய் இழுத்து சென்று வீதியில் போட்டுள்ளமையினால் பரபரப்பு!
![வடமராட்சி கிழக்கு வத்திராயன் பகுதியில் சிசு ஒன்றின் சடலத்தை நாய் இழுத்து சென்று வீதியில் போட்டுள்ளமையினால் பரபரப்பு!](https://likedtamil.lk/wp-content/uploads/2023/01/baby-டெ-vrbrm.jpg)
வடமராட்சி கிழக்கு வத்திராயன் பகுதியில் சிசு ஒன்றின் சடலத்தை நாய் இழுத்து சென்று வீதியில் போட்டுள்ளமையினால் பரபரப்பு!
மருதங்கேணிப் பொலிஸ் பிரிவு உட்பட்ட வத்திராயன் பகுதியில் இன்று நாய்களால் கடித்து எஞ்சிய சிசு ஒருவரின் சடலம் வீதியில் காணப்பட்டுள்ளது. குறித்த சிசு பிரசவித்த உடனேயே மண்ணில் புதைக்கப்பட்ட நிலையில் கொல்லப்பட்டிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
மண்ணில் புதைக்கப்பட்ட சிசுவை நாய்கள் இழுத்துச் சென்று ஒரு பகுதியை உண்டுள்ள நிலையில் எஞ்சிய பகுதியாக சிசு வீதியில் நாய்களால் இழத்து வந்து போடப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மருதங்கேணிப் பொலிசாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய விசாரணைகள் இடம் பெற்று வருவதுடன் பெண் ஒருவர் இனங்காணப்பட்டு அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்த பொலிசார் தற்சமயம் சிசுவின் சடலம் காணப்பட்ட இடத்தில் மருதங்கேணிப் பொலிசார் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுள்ளனர்.
கிளிநொச்சி நீதவான் நாளை பார்வையிட்டதன் பின்னரே சடலம் மீட்கப்படவுள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.