முட்டை இறக்குமதி வேண்டாம் பேசித் தீர்ப்போம்…
![முட்டை இறக்குமதி வேண்டாம் பேசித் தீர்ப்போம்…](https://likedtamil.lk/wp-content/uploads/2023/01/FB_IMG_1672731238239.jpg)
தற்போதுள்ள முட்டை பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண முடியும் என அகில இலங்கை கோழி விற்பனையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
முட்டையை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்தால், முட்டை உற்பத்தியாளர்கள் வாழ்வாதாரம் இழக்க நேரிடும் என அகில இலங்கை கோழி விற்பனையாளர்கள் சங்கம் இன்று தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும், முட்டையின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதை தடுக்கும் வகையில், முட்டை இறக்குமதிக்கு இன்று (02) அமைச்சரவை கூட்டத்தில் இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போதுள்ள முட்டை பிரச்சினை குறித்து அமைச்சரவைக்கு அறிவித்ததன் பின்னர் இந்த உடன்பாட்டை வெளிப்படுத்தியதாக வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்தார்.