5 மாதங்களுக்கு அனுராதபுரம் – வவுனியா புகையிரத சேவை இடைநிறுத்தம் – அமைச்சர் பந்துல
![5 மாதங்களுக்கு அனுராதபுரம் – வவுனியா புகையிரத சேவை இடைநிறுத்தம் – அமைச்சர் பந்துல](https://likedtamil.lk/wp-content/uploads/2022/12/download-14.jpeg)
இந்திய கடன் திட்டத்தின் கீழ் 33 பில்லியன் ரூபா செலவில் அநுராதபுரத்திலிருந்து வவுனியா வரையான புகையிரத பாதை மீள்புனரமைக்கப்படவுள்ளது.
புனரமைப்பு பணிகளுக்காக அநுராதபுரத்திலிருந்து வவுனியாவிற்கான புகையிரத சேவைகள் ஜனவரி 5ஆம் திகதி முதல் 5 மாதங்களுக்கு இடைநிறுத்தப்படவுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
எனினும் அநுராதபுரத்திற்கு வரும் பயணிகள் யாழ்ப்பாணம் செல்வதற்காக குறித்த காலப்பகுதியில் விசேட பஸ் சேவைகளை நடைமுறைப்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் புதன்கிழமை (டிச.28)நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
இவ்வாண்டு ஜனவரியில் புகையிரத திணைக்களத்தின் மாதாந்த வருமானம் 400 மில்லியன் ரூபாவாகக் காணப்பட்டது. எனினும் கடந்த ஆகஸ்ட் மாதாத்தின் பின்னர் கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டதன் பின்னர் மாதாந்த வருமானம் 1000 மில்லியன் ரூபாவாக அதிகரித்துள்ளது.
இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது 150 சதவீத உயர்வாகும். எவ்வாறிருப்பினும் இந்த வருமானத்தின் மூலம் எரிபொருளுக்கான செலவினை மாத்திரமே ஈடுசெய்யக்கூடியதாகவுள்ளது. சம்பளம் மற்றும்; மேலதிக கொடுப்பனவுகளை இதன் மூலம் ஈடுசெய்ய முடியாதுள்ளது.
2023ஆம் ஆண்டு முதல் மக்களுக்கான புகையிர சேவைகளை மேலும் மேம்படுத்துவதற்கான வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்த எதிர்பார்த்துள்ளோம். அதற்கமைய கொழும்பிலிருந்து காங்கேசன்துறை வரை பயணிக்கும் வடக்கு புகையிரகடவையை பாரியளவில் அபிவிருத்தி செய்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.