27 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவு.
வடக்கு கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்ட 12 இந்திய மீனவர்களையும் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை 27 ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு பருத்தித்துறை நீதவான் நீதிமன்ற நீதவான் கிருஷாந்தன் பொன்னுத்துரை உத்தரவிட்டார்.
நேற்று புதன்கிழமை(21) வடக்கு கடற்பரப்பில் வைத்து கடற்படையினரினால் ஒரு ரோலர் படகில் வந்த 12 இந்திய மீனவர்களை கைது செய்து அவர்களை மயிலிட்டி துறைமுகம் கொண்டு சென்று யாழ். மாவட்ட நீரியல்வள திணைக்களத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
அவர்களை நீரியல்வள திணைக்களத்தினர் இன்று வியாழக்கிழமை (22) பருத்தித்துறை நீதிமன்றத்தில் முற்படுத்திய போது இம் மாதம் 27 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.