பெண் ஒருவர் அதி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட சம்பவம்.
மாத்திரையினை மருந்தாளர் மாறி வழங்கியதன் காரணமாக பெண் ஒருவர் அதி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் ஒன்று பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் இடம் பெற்றுள்ளது.
செவ்வாய்க்கிழமை(20) கரவெட்டி பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் முற்பகல் 10 மணிக்கு
பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை வெளி நோயாளர் பிரிவில் சிகிச்சை பெற்றுள்ளார். அவருக்கு வழங்கப்பட்ட மாத்திரைகளை அவர் வீட்டுக்கு சென்று உட்கொண்ட நிலையில் வலிப்பு ஏற்பட்டதன் காரணமாக மீண்டும் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். இதன் போதே அவருக்கு வைத்தியரினால் சிபார்சு செய்யப்பட்ட மாத்திரையை விட வேறு மாத்திரையை மருந்தாளர் வழங்கியமை தெரியவந்தது.