மாவட்ட செயலக உள்ளக விளையாட்டுப் போட்டி நிறைவும் பரிசளிப்பு விழாவும்.
மாவட்ட செயலக ஊழியர் நலன்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டில் முல்லைத்தீவு மாவட்ட செயலக உள்ளக விளையாட்டுப் போட்டி சிறப்பான முறையில் நடைபெற்றதோடு அதன் பரிசளிப்பு நிகழ்வு கடந்த 16.12.2022 முல்லைத்தீவு மாவட்ட கரைதுறைப்பற்று பிரதேச சபை மைதானத்தில் நடைபெற்றது”
இந்த நிகழிவில் மாவட்ட அரசாங்க அதிபர் க.விமலநாதன் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்ததுடன் வெற்றி பெற்ற வீர வீராங்கனைகளுக்கு வெற்றிக் கேடயங்களை வழங்கி கௌரவித்தார்”
மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் அனைவரும் மூன்று குழுக்களாக பிரிக்கப்பட்டு பண்டாரவன்னியன்(சிவப்பு) இல்லத்துக்கு மாவட்ட அரசாங்க அதிபர் க.விமலநாதன் அவர்களும்” அரியாத்தை(பச்சை) இல்லத்துக்கு மேலதிக அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் அவர்களும், முல்லைமணி(நீலம்) இல்லத்துக்கு மேலதிக அரசாங்க அதிபர்(காணி) எஸ்.குணபாலன் அவர்களும்”தலைமை தாங்கினர்”
இந்த விளையாட்டுப் போட்டியானது உடல்”உள ஆரோக்கியத்தை மேம்படுத்தி உத்தியோகத்தர்களின் ஒற்றுமை” வினைத்திறனை அதிகரிக்கச் செய்தல்” மாவட்ட செயலக உத்தியோகத்தர்களுக்கிடையே தொடர்பாடல் மூலமாக புரிந்துணர்வை அதிகரித்து”ஒருங்கிணைந்து செயற்படும் மனப்பாங்கினை கட்டியெழுப்புதல்” மற்றும் கூட்டாண்மையினை விருத்திசெய்தல்”கூட்டு முயற்சி தேகாரோக்கியம் நன்நடத்தை விட்டுக்கொடுக்கும் மனப்பாங்கு மதிப்பளித்தல் போன்ற நன்மைகளை நோக்காகக் கொண்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.’
இதன் கீழ் இருபாலாருக்குமான துடுப்பாட்டம், கரம்”சதுரங்கம், பூப்பந்தாட்டம்”நாற்பது வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான பூப்பந்தாட்டம் ஆகிய போட்டிகள் இடம்பெற்றன. மேலும் ஆண்கள் பிரிவிற்கான உதைபந்தாட்டம் மற்றும் கரப்பந்தாட்டத்துடன் நாற்பது வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கான கரப்பந்தாட்ட போட்டிகளும் இடம்பெற்றன.”
இந்த போட்டிகளின் இறுதி முடிவில் அரியாத்தை இல்லம் முதலாம் இடத்தினையும்”முல்லைமணி இல்லம் இரண்டாம் இடத்தினையும்” பண்டாரவன்னியன் இல்லம் மூன்றாம் இடத்தினையும் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.”
இந்த நிகழ்வில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர்(நிர்வாகம்) திரு.க.கனகேஸ்வரன்”மாவட்ட உதவி அரசாங்க அதிபர் திருமதி லிசோ கேகிதா” மாவட்ட பொறியியலாளரும் மாவட்ட செயலக ஊழியர் நலன்புரிச் சங்கத் தலைவருமாகிய திரு.எஸ்”கஜந்” பதவிநிலை உத்தியோகத்தர்கள்”கிளைத் தலைவர்கள்”உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
Www.Likedtamil.lk