யாழ் வைத்தியசாலை ஒன்றில் ஆண் தாதி ஒருவரின் மோசமான செயலால் பரபரப்பு

யாழ் கோப்பாய் பிரதேச வைத்தியசாலையில் ஆண் தாதி ஒருவரின் கீழ்த்தரமான செயல் வைத்தியசாலையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
யாழ் கோப்பாய் பிரதேச வைத்தியசாலையில் நேற்று சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த 15 வயது மதிக்கத்தக்க சிறுமியிடம் ஆண் தாதி ஒருவர் தகாத முறையில் நடந்து கொண்டமை வைத்தியசாலையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது, கோப்பாய் பிரதேச வைத்தியசாலையில் சிறுமி ஒருவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த சிறுமி நேற்று மாலை முகம் கழுவுவதற்காக வைத்திய சாலையில் குளியலறைப் பகுதிக்கு சென்றிருந்த வேளை விடுதியில் தங்கி இருந்த ஆண் தாதி ஒருவர் சிறுமியிடம் தகாத முறையில் நடந்து கொண்டுள்ளதுடன், குறித்த விடயம் தொடர்பில் யாருக்கும் செல்லக்கூடாது என அச்சுறுத்தியுள்ளார்.
இந் நிலையில் வைத்தியசாலைக்கு வந்த தாயிடம் சிறுமி நடந்தவற்றை தெரிவித்துள்ளார். இச் சம்பவத்தினால் வைத்தியசாலையில் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.