செம்மணி தொடர்பில் நீதியான விசாரணை; யாழில் ஜனாதிபதி அனுர கருத்து

இன்று (1) யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, மயிலிட்டி மீன்பிடி துறைமுகத்தின் அபிவிருத்தி பணிகளின் மூன்றாம் கட்ட ஆரம்ப நிகழ்வில் கலந்து கொண்டிருந்தார்.
இந்த நிகழ்வில் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் மற்றும் பல அரச அதிகாரிகளும் கலந்து கொண்டிருந்தனர்.
செம்மணி தொடர்பாக நீதியான விசாரணை
அதேவேளை செம்மணியில் தோண்டப்படும் மனித எச்சங்கள் தொடர்பாக நீதியான விசாரணைகள் முன்னெடுக்கப்படும் இதில் எவ்வித மாற்றமும் இல்லை என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்துக்கு இன்று உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மயிலிட்டியில் வைத்து இவ்வாறு தெரிவித்துள்ளார்.