ஈரானின் வான்பரப்பு எங்களின் கட்டுப்பாட்டில்; கமேனி ஒழிந்துள்ள இடம் தெரியும்…. டிரம்ப் பதிவால் பரப்ரப்பு

ஈரானின் வான்பரப்பை நாங்கள் தற்போது முழுமையாக எங்களின் கட்டுப்பாட்டின் கீழ் வைத்துள்ளோம் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தனது சமூக ஊடகத்தில் தெரிவித்துள்ளமை ஈரான் -இஸ்ரேல் போர் பதற்றத்தை இன்னும் அதிகரித்துள்ளது.
ஈரான் மீதான இஸ்ரேலின் தாக்குதலிற்கும் அமெரிக்காவிற்கும் தொடர்பில்லை என அமெரிக்கா தெரிவித்துவந்த நிலையிலேயே தற்போது டிரம்ப் இவ்வாறு தெரிவித்துள்ளமை பல கேள்விகளை எழ வைத்துள்ளது. அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது சமூக ஊடகத்தில்,
ஈரானிடம் சிறந்த ஆயுதங்கள் உள்ளன நிறைய உள்ளன ஆனால் அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட பொருட்களுடன் அதனை ஒப்பிடவேண்டாம் என அவர் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேலிய இராணுவம் அமெரிக்காவிலிருந்து கொள்வனவு செய்த ஆயுதங்கள் ஆயுத அமைப்புகளை கொண்டுள்ளது என டிரம்ப் தெரிவித்துள்ளார்.
இதேவேளை முன்னதாக ட்ரூத் சோசலில் அமெரிக்க ஜனாதிபதி ஈரானின் ஆன்மீக தலைவர் ஆயத்தொல்ல கமேனி குறித்து அச்சுறுத்தும் மொழிகளை பயன்படுத்தியுள்ளார்.
கமேனி எங்கிருக்கின்றார் என்பது அமெரிக்காவிற்கு தெரியும் ஆனால் அவரை கொலை செய்யப்போவதில்லை என அமெரிக்க ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
ஆகக்குறைந்தது தற்போதைக்காவது அவரை கொல்லப்போவதில்லை என டிரம்ப் குறிப்பிட்டுள்ளார். ஆனால் பொதுமக்கள் மீதோ அமெரிக்க படையினர் மீதோ ஏவுகணை தாக்குதல்கள் இடம்பெறுவதை விரும்பவில்லை, எங்கள் பொறுமை குறைவடைகின்றது என டிரம்ப் தெரிவித்துள்ளார்.
இதற்கு சிறிது நேரத்தின் பின்னர் நிபந்தனையற்ற சரண் என்பதையும் டிரம்ப் பயன்படுத்தியுள்ளமை போர் இன்னும் தீவிரமடையலாம் என்ற அச்சம் உலக நாடுகளிடம் ஏற்பட்டுள்ளது.