இலங்கை வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு புதிய சட்டம்

இலங்கையில் முச்சக்கர வண்டிகளை ஓட்டும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு, மோட்டார் போக்குவரத்து திணைக்களம் புதிய சட்டம் ஒன்று நடைமுறைப்படுத்தியுள்ளது.
அதற்கமைய, அனைத்து வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் முச்சக்கர வண்டிகளை ஓட்டுவதற்கு தற்காலிக உரிமத்தைப் பெற வேண்டும் என்பது கட்டாயமாகும்.
தற்காலிக உரிமத்தைப் பெற, வெளிநாட்டினர் எழுத்துப்பூர்வ தேர்வு மற்றும் நடைமுறைப் பயிற்சியை மேற்கொள்ள வேண்டும் என்று மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் டி.பி.சி. உதய குமார தெரிவித்தார்.
ஓட்டுநர் உரிமங்களை வழங்கவோ அல்லது வெளிநாட்டினர் முச்சக்கர வண்டிகளை ஓட்டுவதற்கு வசதிகளை வழங்கவோ வேறு எந்த நிறுவனத்திற்கும் அங்கீகாரம் அளிக்கவில்லை எனவும் ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார்.