இலங்கையில் கொவிட்டினால் ஒன்றரை மாத குழந்தை உயிரிழப்பு

காலி தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஒன்றரை மாத குழந்தை கொவிட்டினால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்துள்ளதாக மருத்துவமனையின் இயக்குநர் தெரிவித்துள்ளார்.
மே 17ம் திகதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குழந்தையின் உடல்நிலை மோசமடைந்ததை தொடர்ந்து நிமோனியா பாதிப்புக்குள்ளாகியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டதாகவும் உடனடியாக குழந்தையை தீவிரகிசிச்சை பிரிவிற்கு மாற்றியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.