இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே கடந்த ஐந்து நாட்களாக சண்டை நடந்து வரும் நிலையில், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டில், ஹோர் ஃபக்கான் என்ற இடத்திற்கு 22 கடல் மைல் கிழக்கே, ஹோர்முஸ் ஜலசந்திக்கு அருகில் மூன்று கப்பல்கள் தீப்பிடித்து எரிவது போல காட்சிகள் வெளியாகியுள்ளது. எனினும், இந்த தகவலின் உண்மைத்தன்மை இன்னும் வெளியாகவில்லை. இதற்கிடையே, நாசாவின் ‘ஃபயர் இன்ஃபர்மேஷன் ஃபார் ரிசோர்ஸ் மேனேஜ்மென்ட் சிஸ்டம்’ வரைபடம் கூட ஓமன் வளைகுடாவில் மூன்று இடங்களில் தீப்பற்றியிருப்பதை உறுதிப்படுத்துவது போல உள்ளது. நடுக்கடலில் பற்றி எரிகிறதா ஈரானின் 3 கப்பல்கள் ? வளைகுடாவில் பரபரப்பு | 3 Iranian Ships Burning Middle Sea Israel Iran War வெளியான காட்சிகள் உண்மையா? அதேவேளை உலகில் பயன்படுத்தப்படும் மொத்த எண்ணெயில் சுமார் ஐந்தில் ஒரு பங்கு இந்த ஜலசந்தி வழியாகவே செல்கிறது. யாழ்ப்பாணம் – பலாலி வீதியை இரவு 07 மணி வரையில் திறக்க பணிப்பு யாழ்ப்பாணம் – பலாலி வீதியை இரவு 07 மணி வரையில் திறக்க பணிப்பு 2022 ஆம் ஆண்டு தொடக்கம் முதல் கடந்த மாதம் வரை, ஒரு நாளைக்கு சுமார் 1.78 கோடி முதல் 2.08 கோடி பேரல் கச்சா எண்ணெய், கண்டன்சேட் மற்றும் எரிபொருட்கள் இந்த ஜலசந்தி வழியாகச் சென்றுள்ளதாக வோர்டெக்ஸா (Vortexa) தரவுகள் தெரிவிக்கின்றன. எனினும் இதுகுறித்து ஐக்கிய அரபு எமிரேட்ஸ் வெளியுறவு அமைச்சகம் அல்லது ஹோர் ஃபக்கான் கொள்கலன் முனையத்தில் இருந்து எந்த அதிகாரப்பூர்வ பதிலும் வரவில்லை என்பது குறிப்பிடத்க்கது.

சூலை 5ஆம் திகதி உலகில் பேரழிவு நடக்கப்போவதாக நவீன பாபா வங்கா கணித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஜப்பானைச் சேர்ந்த ரையோ தத்சுகி, தனது கனவில் வரும் நிகழ்வுகளை வரைந்து வெளியுலகிற்கு தெரியப்படுகிறார்.
அவற்றில் உள்ள பெரும்பாலான விடயங்கள் உண்மையில் நடப்பதால், இவரை புதிய பாபா வங்கா என்று அழைக்கின்றனர்.
கடந்த 2021ஆம் ஆண்டு முதல் இவர் வரைந்து பல விடயங்களை கூறிவருகிறார். ஆனால் டயானாவின் மரணம், கொரோனா பேரிடர், 2011ஆம் ஆண்டு நிலநடுக்கம் ஆகியவற்றையும், தனது கனவில் தோன்றியதாக வரைந்து வைத்திருந்தாராம்.
இது மட்டுமல்லாமல் 2030ஆம் ஆண்டில் கொரோனா போன்ற ஒரு பெருந்துயர் மீண்டும் வரும் எனவும் தத்சுகி கணித்திருந்தார்.
இந்த நிலையில், ரையோ தத்சுகி (Ryo Tatsuki) எழுதியிருக்கும் புத்தகத்தில் சூலை 5ஆம் திகதி பேரழிவு காத்திருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அவர் ஜப்பானில் இந்த பேரழிவு ஏற்படும் என குறிப்பிட்டிருப்பதாக கூறப்படுகிறது.
இதன் விளைவாக, அந்நாளில் ஜப்பானுக்கு செல்லும் விமானங்களில் முன்பதிவுகள் குறைந்து, ஏற்கனவே டிக்கெட் எடுத்திருந்தவர்களும் தங்களது டிக்கெட்டை ரத்து செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதேபோல் இந்த கணிப்பு பல்வேறு வகையிலும் சுற்றுலாத் துறை பாதிக்கப்பட்டிருப்பதாகவும், விடுதிகள் முன்பதிவு குறைந்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
அத்துடன் ஜப்பானியர்கள் பலர் ஏற்கனவே முன்பதிவு செய்திருந்த சுற்றுலா திட்டங்களையும் ரத்து செய்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆனால், ஜப்பான் நாட்டின் அதிகாரிகளோ ‘நவீன பாபா வங்காவின் கணிப்புகளை மக்கள் நம்ப வேண்டாம். இதுபோன்று உலகப் பேரழிவுகளை முன்கணிக்க முடியாது. இவை வெறும் புரளி’ என மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.